திமுக கூட்டணிக்கு டெபாசிட் காலி; முன்னாள் அமைச்சர் கொடுத்த ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

திமுக கூட்டணிக்கு டெபாசிட் காலி; முன்னாள் அமைச்சர் கொடுத்த ஷாக்!

திமுக கூட்டணிக்கு டெபாசிட் காலி; முன்னாள் அமைச்சர் கொடுத்த ஷாக்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம், வேலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடந்தது. இறுதிநாளில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக வேட்புமனு தாக்கல் செய்த நபர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வெளியிடப்படவில்லை.

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை

எனவே இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் (செப்டம்பர் 25) கடைசி நாள் ஆகும். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 16வது வார்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றிய அதிமுக

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் தமிழழகன் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு படுதோல்வி

ஆனால் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசோ எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுக்கப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நீட் தேர்வும் ரத்து செய்யப்படவில்லை. இவ்வாறு தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது.

ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டுமின்றி கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். இதையெல்லாம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad