மதுப்பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்: சரக்குக்கு பில் கட்டாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

மதுப்பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்: சரக்குக்கு பில் கட்டாயம்!

மதுப்பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்: சரக்குக்கு பில் கட்டாயம்!

தமிழநாடு அரசுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் நல்ல வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் மது வாங்க வருபவர்களிடம் கடைக்காரர்கள் அதிக விலைவைத்து விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பிட்ட விலைக்குதான் விற்க வேண்டும் என கூறினாலும் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், “ஏற்கனவே அறிவுறுத்தியபடி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். மது விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில், “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் விளக்கம் தெரிவித்து அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும். மொத்தமாக மதுவகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad