கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை பிடிஆர் புறக்கணிக்க இதுதான் காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை பிடிஆர் புறக்கணிக்க இதுதான் காரணம்?

கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை பிடிஆர் புறக்கணிக்க இதுதான் காரணம்?


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில கூட்டம், உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னெளவில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.


'கூட்டம் பற்றிய தகவல் தமக்கு தாமதமாக கிடைத்ததாகவும், முன்கூட்டியே ஒப்புக் கொண்டபடி தற்போது, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறேன்' என்றும் அவர் தன்நிலை விளக்கம் அளித்திருந்தார்.

அவரது இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'கொழுந்தியாளுக்கா வளைகாப்பு?' என, நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி அமைச்சரை டென்ஷனாக்கினர்.

'ஒரு மாநிலத்தின் நிதியமைச்சருக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதைவிட வளைகாப்பு ரொம்ப முக்கியமா?' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வியெழுப்பி இருந்தார். அதிமுக முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிடிஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தற்போது வலம் வந்துகொண்டிருக்கும் தகவல் ஒன்று அறிவாலயத்தில் அனலை கிளப்பியுள்ளது.


.அதாவது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிற மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்கள் தனி விமானத்தில் லக்னௌ சென்றுள்ளனர்.

அவர்களை போல தனக்கும் தனி விமானம் வேண்டுமென பிடிஆர் கேட்டதாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி மறுத்துவிட்டதால் கவுன்சில் கூட்டத்துக்கு தியாகராஜன் செல்லவில்லை என்றும் திமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கும்படி கட்சி மேலிடம் அவரை அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad