"நீட்" தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றுவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழக சட்டப்பேரவையில், வரும் 13 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்படும் என, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், ஆட்சி பொறுப்பில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான
தி.மு.க. அரசு, நீட் தேர்வுக்கு எதிராக நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்து இருந்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு குறைவாக உள்ளதால் மேம்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக நாளை ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது.
இருபது லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி
செலுத்தியவர்கள் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியை நாளை எட்டும். இரண்டாம் டோஸ் செலுத்தாமல் உள்ள 18 லட்சம் பேருக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கி ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். விரைவில் அனைத்து இடங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழக அரசு விரும்பாத நிகழ்வு நாளை நடைபெற உள்ள நீட் தேர்வு.
No comments:
Post a Comment