நான் அப்படியா செஞ்சேன், நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க: இபிஎஸ் குமுறல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

நான் அப்படியா செஞ்சேன், நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க: இபிஎஸ் குமுறல்!

நான் அப்படியா செஞ்சேன், நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க: இபிஎஸ் குமுறல்!

சட்டமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டே வரவுள்ளதாக நேற்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவினர் மீது தொடரப்படும் வழக்குகள் குறித்து பேசியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிரச்சார மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 23) திருப்பத்தூரில் தொடங்கினார்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாம் வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இப்போதைய திமுக ஆட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவை பழிவாங்குவதை மட்டுமே இப்போது வேலையாக செய்து வருகிறது” என்று கூறினார்.

கூட்டுறவு நகைக் கடன் வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக அது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். “தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் பேசினார். ஆனால் இப்போது கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தள்ளுபடி என்கிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகளை சொல்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்றது. நமது ஆட்சியில் கிராமங்களுக்கு செய்த சாதனைகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேளுங்கள். அதேநேரம் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்.

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில் அது குறித்து பேசிய அவர், “இந்த நான்கு மாத காலத்தில் திமுக ஆட்சியின் வேலை என்னவென்றால் அதிமுக காரர்கள் மீது வழக்குப் போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு பண்ணுவது இதுதான் அவர்களது பணியாக இருக்கிறது. வாக்களித்த மக்களைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. மக்களுக்கு எந்த நன்மையும் இந்த நான்கு மாதத்தில் கிடைக்கபெறவில்லை.



நானும் நான்கு ஆண்டுகாலம் 2 மாதம் முதலமைச்சராக இருந்தேன். நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம். நாங்கள் அப்படி செய்தோமா, இல்லையே” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Top Ad