என்ன திடீர் டிரான்ஸ்பர், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டிய தமிழக அரசு!
தமிழகத்தில் எந்தவொரு புதிய அரசு பதவியேற்கும் போதும், தங்களது நிர்வாக வசதிகளுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது வழக்கம். இதில் தங்களுக்கு திருப்திகரமான சூழல் வரும் வரை இடமாற்ற உத்தரவுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாக பணியிடமாற்ற உத்தரவுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
இதன் பின்னணியில் அரசியல் ரீதியிலான காரணங்கள் இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டிஜிபியாக இருந்த கே.ஜெயந்த் முரளி ஐபிஎஸ் அவர்கள்,
சிலைத் தடுப்பு பிரிவில் அதிரடி
சென்னை சிலைத் தடுப்பு பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிலைத் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் ஐபிஎஸ் அவர்கள், சென்னை ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில்
வைக்கப்பட்ட ஐஜி மகேந்திர் குமார் ரதோட் ஐபிஎஸ் அவர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி/ உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி/ உறுப்பினர் செயலராக இருந்த ஜி.கார்த்திகேயன் ஐபிஎஸ் அவர்கள், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.அருண் ஐபிஎஸ் அவர்கள், சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.சரவண சுந்தர் ஐபிஎஸ் அவர்கள், திருச்சி மண்டல டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment