நகராட்சிகளாக மாறிய ஒன்பது பேரூராட்சிகள்: அரசாணை வெளியீடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

நகராட்சிகளாக மாறிய ஒன்பது பேரூராட்சிகள்: அரசாணை வெளியீடு!

நகராட்சிகளாக மாறிய ஒன்பது பேரூராட்சிகள்: அரசாணை வெளியீடு!

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் எவை எவை என்பது குறித்த அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் , இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாற்றப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவித்தார். இது தொடர்பான அரசாணை ஓரிரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் தற்போது உள்ளன

No comments:

Post a Comment

Post Top Ad