எடப்பாடி முன்னே ஓபிஎஸ் பின்னே: தேர்தல் பணிகள் தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

எடப்பாடி முன்னே ஓபிஎஸ் பின்னே: தேர்தல் பணிகள் தீவிரம்!

எடப்பாடி முன்னே ஓபிஎஸ் பின்னே: தேர்தல் பணிகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து வேட்புமனு பரிசீலனை, நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக வெளியேறிய நிலையில் பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்தததாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் களமிங்குகிறார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 9 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பன்னீர் செல்வம் பிரசாரம் செய்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad