பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பள்ளி சென்ற மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதனை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவர்களை அழைத்து வர பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த ஆர்.டி.ஓ-க்களின் எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கல்வித் துறை, போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒரு வாரமாக தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி திறப்பு, முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் உள்ளிட்டவைகள் முறையாக உள்ளதா? அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர், உதவியாளர் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறைபாடு உள்ள வாகனங்கள், மறு ஆய்வுக்கு அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad