சர்ச்சைக்குரிய கருத்து: முதலமைச்சரின் தந்தை சிறையில் அடைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

சர்ச்சைக்குரிய கருத்து: முதலமைச்சரின் தந்தை சிறையில் அடைப்பு!

சர்ச்சைக்குரிய கருத்து: முதலமைச்சரின் தந்தை சிறையில் அடைப்பு!

பிராமணர்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த் குமார் பாகெலை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் தந்தை, நந்த் குமார் பாகெல் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அப்போது அவர் சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

நந்த் குமார் பாகெல் பேசுகையில், 'இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்' எனக் கூறினார்.முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த் குமாரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், என் தந்தை மீது மரியாதை உண்டு, அதற்காக அவர் செய்த குற்றத்தை முதலமைச்சராக தன்னால் மன்னிக்க முடியாது எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad