தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பலி - பாதிப்பில் கோவையை விஞ்சிய சென்னை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பலி - பாதிப்பில் கோவையை விஞ்சிய சென்னை!

தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பலி - பாதிப்பில் கோவையை விஞ்சிய சென்னை!


தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக 1 ஆயிரத்து 624 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 947 பேர் ஆண்கள், 677 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 62 ஆயிரத்து 177 ஆக அதிகரித்து உள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 189 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 184 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 189 ஆக அதிகரித்து உள்ளது. அதே சமயம், கோவை மாவட்டத்தில், நேற்று 183 ஆக இருந்த பாதிப்பு, இன்று 181 ஆக குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 550 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 1 ஆயிரத்து 639 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 9 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 17 ஆயிரத்து 192 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad