உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புங்க - டிடிவி அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புங்க - டிடிவி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புங்க - டிடிவி அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையொயொட்டி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அமமுக தொண்டர்கள் விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது '' தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது வருவாய் மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இத்தேர்தலில் அமமுகவின் சார்பில் பல்வேறு பதவி இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் அமமுக உடன்பிறப்புகள் மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட அமமுக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட அமமுக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad