தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களை நியமித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோதல் நடைபெற்று காலியாக உள்ள பதவி இடங்களுக்கு அக்டோபா் மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன்படி, காஞ்சிபுரம் - அமுதவள்ளி, செங்கல்பட்டு - சம்பத், விழுப்புரம் - பழனிசாமி, கள்ளக்குறிச்சி - விவேகானந்தன், வேலூர் - விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை - மதுமதி, திருப்பத்தூர் - காமராஜ், நெல்லை - ஜெயகாந்தன், தென்காசி - பொ. சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள், வேட்புமனுத் தாக்குதலுக்கு கடைசி நாளான, வரும் 22 ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, தேர்தல் கண்காணிப்புப் பணியை தொடங்குவார்கள் என்றும், அவர்களின் அலைபேசி எண்கள் குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் /மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad