ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வி அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வி அமைச்சர்!

ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வி அமைச்சர்!

ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.

தலைநகர் சென்னையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், தி.மு.க.,வைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது பற்றியும், அவர்களது கற்றல் திறனை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி, அமைச்சரிடம் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டு உள்ள கோரிக்கைகளை, முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது கோரிக்கையை அறிக்கையாக தயார் செய்து முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad