அரசியலில் குதித்த விஜய்.. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதியாகும்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம் வகிக்கும் பாமக உள்ளாட்சித் தேர்தலில்
தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது. பின்னர் தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது.
நாம் தமிழர் கட்சி, மக்கல் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க பச்சைக் கொடி காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் சார்பாக அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்த விஜய், தேர்தல் அரசியலில் இறங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தை பயன்படுத்த விஜய் அனுமதி அளித்துள்ளதாக அவரது இயக்க நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment