பெரியார் மட்டுமா சமூக போராளி? ஒரு நைட் ஆட்சியை கொடுத்து பாரு என்கிட்ட - சீமான் பொளேர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

பெரியார் மட்டுமா சமூக போராளி? ஒரு நைட் ஆட்சியை கொடுத்து பாரு என்கிட்ட - சீமான் பொளேர்

பெரியார் மட்டுமா சமூக போராளி? ஒரு நைட் ஆட்சியை கொடுத்து பாரு என்கிட்ட - சீமான் பொளேர்

சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நடந்தது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆளுநர் ஆர்என் ரவியின் நியமனத்தில் பாஜகவின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது?

இது என்ன கேள்வி? எந்த கட்சி மத்தியில் ஆள்கிறதோ அவர்களுக்கு நெருக்கமானவர்கள், வேண்டியவர்களை ஆளுநராக நியமிப்பது வழக்கமாக உள்ளது. இது போன்ற நியமனங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை. ஆளுநர் பதவிக்கு வருபவர், சிறு வயதில் இருந்தே மக்கள் பணியை ஆற்றி இருக்க வேண்டும். மக்களோடு மக்களாக நின்றிருக்க வேண்டும். ஆனால், ஒய்வு பெற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு பின்னால் காரணம் இருக்கும். நீதி கிடைக்கும் என்று நாம் செல்வதே நீதிமன்றத்தையும், நீதிபதியையும் நாடித்தான். ஆனால், அவர்கள் ஒய்வு பேற்றை பின்பு கட்சி சார்பாக பணி கொடுத்தால், அதற்காகவே நீதிபதி போன்றோர் பணி காலத்தில் காத்திருப்பது போலத்தான் இருக்கிறது. அப்போது நீதியின் நிலைமையை கொஞ்சம் சிந்தியுங்கள்.


நீட் மரணங்கள்?

நீட் மரணம் குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் என்றால், கடந்த ஆட்சியில் மாணவர்கள் இறந்து போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அதனை ஏன் அரசியல் செய்தார்கள்? ஆட்சிக்கு வந்த உடனே நீட்டை ஒழிப்பும் என்று பேசியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் தீர்மானம் போட்டால் என்ன பயன்? 8 கோடி பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு, அவர்களுக்காக ஒன்றிய அரசின் சட்டத்தை ஏன் எதிர்க்க கூடாது? என் மக்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தால் அதனை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் என்று யாரவது துணிவாக கேள்வி எழுப்புவார்களா? சண்டை செஞ்சால்தான் இது ஒழியும்.

சமூக நீதி நாள்?

சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் இரட்டை மலை சீனிவாசன் போன்ற பலர் போராடியுள்ளனர். ஆனால், பெரியார் மட்டுமே சமூக நீதிக்காக போராடினார் என்பதை ஏற்க முடியாது. தமிழக போராளிகளில் பெரியாரும் ஒருவர் என்பதை வேண்டுமானால் ஏற்க முடியும். இப்படி பெரியாரை மட்டுமே சமூக நீதிக்காக அடையாளப்படுத்தி தமிழர்களின் அடையாளத்தை அழித்தால் எந்த வகையில் அதனை ஏற்க முடியும்?

சுங்க கட்டணம்?

தரமான சாலையில் பயணிக்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார். என்னுடைய காரின் விலை 21 லட்சம். அதில் 3 லட்ச ரூபாயை சாலை வரியாக கட்டியிருக்கேன். எந்த ரோட்டுக்கு என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் நான் அந்த ரோட்டில் மட்டும் பயணிக்கிறேன். என்னிடம் சுங்க கட்டணம் கேட்க வேண்டாம். ஒரே ஒரு வருஷம் ஆட்சியை என்னிடம் கொடுத்து பாருங்க. ஒரே இரவில் ஜேசிபியை வைத்து சுங்க சாவடிகளை இடித்து விடுவேன்'' என இவ்வாறு சீமான் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad