ஸ்டாலின் மருமகனின் கொங்கு ஆபரேஷன்: அதிமுக மாஜிக்களுக்கு கொக்கி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

ஸ்டாலின் மருமகனின் கொங்கு ஆபரேஷன்: அதிமுக மாஜிக்களுக்கு கொக்கி!

ஸ்டாலின் மருமகனின் கொங்கு ஆபரேஷன்: அதிமுக மாஜிக்களுக்கு கொக்கி!

திமுக கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் மற்ற இடங்களிலெல்லாம் திமுக கூட்டணி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொங்கு மண்டலம் மட்டும் எட்டாக் கனியாகிவிட்டது.
ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பெரியளவில் விமர்சனங்கள் ஏதும் எழவில்லை. முதல்வரும் அவரது அமைச்சரவையும் ஆட்சியை வெற்றிகரமாக நடத்த, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முதல்வரின் மருமகன் சபரீசன் சில திட்டங்களை தீட்டி வருகிறார்.


ஆட்சிக்கு வந்த கையோடு கொங்கு மண்டல மாற்று கட்சி நிர்வாகிகள் திமுகவை நோக்கி படையெடுத்து வந்தனர். அதிமுக - அமமுகவில் ஏற்கெனவே முக்கிய பதவிகளை வகித்த செந்தில் பாலாஜி மூலம் பல விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. நகர்ப்புற பகுதிகளுக்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்குள் அதிமுகவை கொங்கு மண்டலத்தில் பலவீனப்படுத்தவும், திமுகவை பலப்படுத்தவும் சபரீசன் ஒரு ஆபரேஷனை தொடங்கியுள்ளார்.

கொங்கு அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கட்சியில் செல்வாக்கு செலுத்தியவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் தலைமை வந்த பின்னர் ஒதுங்கியோ, ஓரங்கட்டப்பட்டோ இருப்பவர்கள் டிக் அடிக்கப்படுகிறார்கள். அவர்களைத் தான் தற்போது திமுகவுக்கு பார்சல் செய்யும் பணி தற்போது நடைபெற்ற ு வருகிறது என்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் செ.ம.வேலுசாமி. ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடித்த இவருக்கு அப்பகுதியில் செல்வாக்கும் அதிகம். ஆனால் ஒரு கார் விபத்துக்கு பிறகு அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொங்கு மண்டலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டி வந்துவிட்டனர். இதனால் செ.ம.வேலுசாமி இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் தான் அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு அவர் அடித்த போஸ்டர் மூலம் பேசுபொருளானார். கட்சியில் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக இருந்தும்கூட கட்சிப் பெயரையோ பதவியோகூட போடாமல் போஸ்டர் அடித்து ஒட்டினார். போஸ்டர் மூலமாக திமுகவில் சேர ஸ்டாலினுக்கு மனு போட்டுள்ளாரோ என அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் பேச்சு எழுந்தது.



சபரீசன் அன்ட் டீம் இவரை கொத்தி தூக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் நீலகிரியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புத்திசந்திரனையும் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள். ஆனால் பெரிய தலைகளை கொண்டு வருவதற்கு திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனராம். அவர்கள் வந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என நினைத்து அப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்களாம்.

ஆனால் யாரை வைத்து பணியாற்றினால் கட்சி வளருமோ அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதில் கட்சித் தலைமை உறுதியாக இருக்கிறதாம். இதனால் அப்பகுதி உடன்பிறப்புகளுக்கு அதிமுக மாஜிக்களை வரவேற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad