வாகனங்களில் தலைவர்கள் புகைப்படங்கள், ஸ்டிக்கர்களுக்கு தடை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

வாகனங்களில் தலைவர்கள் புகைப்படங்கள், ஸ்டிக்கர்களுக்கு தடை!

வாகனங்களில் தலைவர்கள் புகைப்படங்கள், ஸ்டிக்கர்களுக்கு தடை!

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியுள்ளவர்களில் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு இந்த ஸ்டிக்கர்கள் வாய்ப்பாக அமைகிறது. இதனால், குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர். எனவே, 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் ஸ்டிக்கர்களை ஒட்டி
வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை தள்ளி வைத்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் வாகனங்களில் வழக்கறிஞர், பிரஸ், போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் அதிகளவில் ஒட்டி உள்ளனர். இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. இது குறித்து, பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேபோல், வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள், தலைவர்களின் புகைப்படங்கள் சாதி கட்சி தலைவர்களின் படங்களை வெளிப்புறங்களில் தெரிவதுபோல் ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர். இது காவல்துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக்கூடாது, சோதனை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ஒட்டப்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளையும் தலைவரின் புகைப்படங்களையும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையில்லாத ஒன்று. இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், “வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி வருடந்தோறும் உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad