புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து!

புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர். 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், இந்திய‌ உளவுத்தறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சிபிஐ-யில் பணியாற்றியபோது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.இந்திய அரசு பணியில் இருந்து 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதும், தேசிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்க ு பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுகவின் சார்பாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad