கமலுக்கு நன்றி சொன்ன மாணவர்கள்; பின்னணியில் இப்படியொரு சர்ப்ரைஸ்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில், கட்சியை சீரமைக்கும் வேலைகளில் கமல் ஹாசன் ஈடுபட்டுள்ளார். இதையொட்டி கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து வருகிறார். அடுத்த சில நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி மக்கள் நீதி மய்யமும் பல்வேறு வேலைகளில்
ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல் ஹாசன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன் வைத்த கோரிக்கை
இதற்கிடையில் தமிழக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க வழி செய்யுமாறு மாநில அரசுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ
மாணவர்கள் சார்பில் சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்திருந்தார். அதில் ஒரு விஷயத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நன்றி தெரிவித்த மருத்துவ மாணவர்கள்
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையில், கடந்த 2.8.2021 அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவர் அணி சார்பாக, தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி, அதற்கு தீர்வு கோரி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக மாணவர்களின் படிப்புக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு நடந்த காலங்களை தமிழ்நாட்டு அரசு கற்ற காலமாக ஏற்க மறுப்பதும்,
No comments:
Post a Comment