உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அதற்கான பணிகளை மாநில தோதல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோதலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு காலை 7 முதல் 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad