அரசு ஊழியர்களுக்கு சரண்டர் பணம் எப்போது வரும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

அரசு ஊழியர்களுக்கு சரண்டர் பணம் எப்போது வரும்?

அரசு ஊழியர்களுக்கு சரண்டர் பணம் எப்போது வரும்?

கொரோனா பெருந்தொற்றால் அதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. மக்கள் தங்கள் வாழ்வாதாராங்களை இழந்து தவித்தனர். பாதிப்பு குறைவதும் பொது முடக்கத்தில் விதிக்கப்பட்ட தள்ர்வுகள் காரணமாகவும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை பணி பாதுகாப்பு உள்ளது, சம்பளத்திலும் பிரச்சினை இல்லை. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி சரண்டர், ஜிபிஎஃப், வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்தது.

இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் சலுகைகள் திரும்ப வழங்கப்படாதது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. நிறுத்திவைக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், “சங்க மாநில செயற்குழு சமீபத்தில் நடந்தது. இதில் சென்னையில் டிசம்பர் 18, 19ஆம் தேதி மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

முந்தைய அதிமுக ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றார்.



இதில் சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தாலும், பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad