பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து: வெளியானது அரசாணை!
பேக்கேஜ் ஒப்பந்த முறை ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய பேக்கேஜ் டெண்டர் முறை 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தமுறையில் பல்வேறு புகார்கள் எழுந்தன.
பேக்கேஜ் ஒப்பந்த முறையும் அதன் பாதிப்புகளும்!
பேக்கேஜ் ஒப்பந்த முறை மூலம் ஒருவருக்கு மட்டுமே பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்கள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஒப்பந்தம் எடுக்கும் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் உள்ள பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு தாங்கள் எடுத்த பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது .
எ.வ.வேலு நடத்திய ஆலோசனை!
பேக்கேஜ் ஒப்பந்த முறை குறித்து கடந்த ஜூன் மாதம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பேக்கேஜ் ஒப்பந்த முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசுக்கு எழுதிய கடிதம்!
No comments:
Post a Comment