குரூப் 4 பணியிட கலந்தாய்வு... டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

குரூப் 4 பணியிட கலந்தாய்வு... டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு!

குரூப் 4 பணியிட கலந்தாய்வு... டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் காலியமாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தியது.
மொத்தம் 9,8882 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் பெரும்பாலான பணியிடங்களுக்கு நேர்காணல் முடிவடைந்துள்ள நிலையிவ் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என காலியாக உள்ள 430 காலிப் பணியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இதுதொடர்பான தற்காலிக தகுதிப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணவில் பங்கேற்க தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad