ஸ்டாலின் சாய்ஸ்: யார் இந்த கனிமொழி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

ஸ்டாலின் சாய்ஸ்: யார் இந்த கனிமொழி?

ஸ்டாலின் சாய்ஸ்: யார் இந்த கனிமொழி?

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, அவ்விரு மாநிலங்களவை இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த 2 காலி இடங்களுக்கும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகிய இருவரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

ஏற்கனவே அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய இரண்டு இடங்களுக்கான திமுக வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுகிறது.



தங்க தமிழ்செல்வன், கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்ட பலரும் இதற்கான ரேஸில் இருந்த நிலையில், மாநிலங்களவையில் திமுக சார்பில் பெண்களும் இடம் பெற வேண்டும் என்று விரும்பும் ஸ்டாலின், ஏற்கனவே மாநிலங்களவையில் திறம்பட செயலாற்றிய தனது தங்கை கனிமொழியின் பெயரிலேயே இருக்கும், மருத்துவர் கனிமொழியை மாநிலங்களவைக்கு அனுப்பவும் ஆலோசித்து வருவதாக “ராஜ்யசபாவில் மீண்டும் ஒரு கனிமொழி: கூல் செய்யும் ஸ்டாலின்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி,
கனிமொழி என்.வி.என்.சோமு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மருத்துவர் அணிச் செயலாளர், செய்தித்தொடர்பாளராக இருக்கும் மருத்துவர் கனிமொழி, கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலின் போதும் அவருக்கு சீட் கொடுப்பதாக தலைமை உத்தரவாதம் கொடுத்து, கடைசி நேரத்தில் அது வேறு ஒருவருக்கு போய்விட்டது.

திமுகவை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் என்.வி.நடராஜன்தான் கனிமொழியின் தாத்தா. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். கனிமொழியின் அப்பா என்.வி.என்.சோமு. திமுகவுக்காக கடுமையாக உழைத்தவர். வட சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்தவர் சோமு.

No comments:

Post a Comment

Post Top Ad