இத்தனை லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போடலயா? உடனே கிளம்புங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

இத்தனை லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போடலயா? உடனே கிளம்புங்க!

இத்தனை லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போடலயா? உடனே கிளம்புங்க!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கையிருப்பிற்கு ஏற்ப தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான தடுப்பூசி தேவையை மத்திய அரசிடம் கேட்டு தமிழக அரசு பெற்று வருகின்றது. இந்த சூழலில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த இரு மெகா தடுப்பூசி முகாம்களிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட இலக்கு

இன்றைய தினம் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இலக்கை விட அதிகமாக 20-25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் 60 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலை ஏற்படும். தற்போது 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

நாளை விடுமுறை அறிவிப்பு

தொடர்ந்து பேசுகையில், தடுப்பூசி முகாம்களில் மருத்துவத் துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த களப்பணியாளர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில் நாளை விடுமுறை எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று தெரிவித்தார். இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பெரிதும் கட்டுக்குள் வந்திருக்கிறது. இருப்பினும் தினசரி தொற்று சிறிய அளவில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 56 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இரண்டாவது தவணையை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் மட்டும் செலுத்தி கொண்டனர். அந்த வகையில் சுமார் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளவில்லை. முதியோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த ஒருமாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad