மாநகராட்சி தேர்தலை நடத்த டைம் கேட்பது ஏன்? -அமைச்சர் நேரு விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

மாநகராட்சி தேர்தலை நடத்த டைம் கேட்பது ஏன்? -அமைச்சர் நேரு விளக்கம்!

மாநகராட்சி தேர்தலை நடத்த டைம் கேட்பது ஏன்? -அமைச்சர் நேரு விளக்கம்!

சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை நகர்ப்புற சமுதாய நலக் கூடத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று திறந்து வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களையும் அவர் வழங்கினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், திமுக அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது.

அந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி பணிகளுக்கு எடுக்கும்போதே ஒப்பந்த அடிப்படையில்தான் பணியாளர்களை எடுக்கிறோம். எனினும் அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றை செய்ய தமிழக முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி சுகாதாரத் துனை ஆணையர் மனீஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad