சரக்கு போதையில் திணறும் உள்ளாட்சித் தேர்தல்: நூற்றுக்கணக்கில் ஃபுல் பாட்டில்கள் பறிமுதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

சரக்கு போதையில் திணறும் உள்ளாட்சித் தேர்தல்: நூற்றுக்கணக்கில் ஃபுல் பாட்டில்கள் பறிமுதல்!

சரக்கு போதையில் திணறும் உள்ளாட்சித் தேர்தல்: நூற்றுக்கணக்கில் ஃபுல் பாட்டில்கள் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதிக்கு உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பெங்களூரிலிருந்து தனியார் பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாகக் கடலூர் செல்லும் தனியார் பேருந்தை குன்னத்தூர் அருகே திருக்கோவிலூர் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

சோதனையின் போது, 12 பழப் பேட்டிகளில், திருட்டுத்தனமாக மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 576 பெங்களூரு மது பாட்டில்களை, மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த உத்திரன்(36), சக்தி விநாயகம் (32), விக்ரமன் (34), பாலு( 38) கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் வீரணம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (20), ஸ்டாலின் (18) ஆகிய 6 பேரும் பேருந்திலிருந்து இறக்கி, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் போது திருக்கோவிலூர் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து, அவர்கள் ஓட்டி வந்த 3 இருசக்கர வாகனத்தையும், 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்காகவே சரக்கு கடத்தி வரப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad