ஜெயலலிதா ஞாபகம்: போயஸ் கார்டன் புறப்பட்ட சசிகலா
சசிகலா இன்று தனது தி.நகர் இல்லத்திலிருந்து கிளம்பி போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் சென்றார்.
ஜெயலலிதாவுடன் சசிகலா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனில் இருந்துள்ளார். ஆனால் வேதா நிலையம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன் வாசலில் உள்ள ‘ஜெய கணபதி’ கோயிலுக்கு சென்றார். சாலையோரத்தில் உள்ள விநாயகருக்கு அர்ச்சன
ை செய்து வழிபாடு நடத்தினார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
வேதா நிலையம் தனது கையைவிட்டு சென்றாலும் போயஸ் கார்டனைவிட்டு செல்ல மனம் இல்லாத சசிகலா அங்கு புதிய பங்களா ஒன்று கட்டி வருகிறார். வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே புதிய பங்களாவையும் அவர் கட்டுவதாக கூறப்பட்டது.
ஆனால் வருமான வரித்துறையினர் சசிகலாவின் பல்வேறு சொத்துக்களை முடக்கிவரும் நிலையில் இந்த பங்களாவுக்கும்
சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் குடியேறாவிட்டாலும் அங்கு இதற்கு முன் ஜெயலலிதாவோடு சேர்ந்து வழிபாடு செய்த கோயில்களை மறக்காமல் வழிபட்டு வருகிறார்.
No comments:
Post a Comment