அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். இந்த பருவமழை, டிசம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு மழைப் பொழிவைத் தரும். பருவமழைக் காலத்தில் புயல் பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வர்தா, கஜா, நீலம், புரவி, நிவர் என தமிழகத்தை புரட்டிப் போட்ட புயல்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. மழைக் காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க., தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகளை சீரமைக்கும் பணிகளும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
நீரினால் பாதிப்பு ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு நல்ல நிர்வாகத்திற்கு சான்றாக விளங்குவது இப்படிப்பட்ட காலங்களில் மக்களை சேதமில்லாமல் எப்படி காப்பாற்றிக் கொண்டு செல்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது.

புயல் - வெள்ளக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழை நீடிக்கும்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் பாதிப்பை கண்டறிந்து எதிர்காலத்தில் வரும் பாதிப்புகளை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் அலுவலர்களை நியமித்து நிவாரண பொருட்கள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்புக்கு பின் உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad