பொங்கல் பரிசு: ரேஷன் அட்டை தாரர்களுக்கு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

பொங்கல் பரிசு: ரேஷன் அட்டை தாரர்களுக்கு சிக்கல்!

பொங்கல் பரிசு: ரேஷன் அட்டை தாரர்களுக்கு சிக்கல்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.


பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், ஒரு கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகளை தயாரிக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதமே நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறிகளுக்கு நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.499 கோடி நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.இதனால், ஜூன் மாதம் உற்பத்தியை தொடங்க வேண்டிய வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மேலும், விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இதற்கு மேல் நூல்களுக்கு டெண்டர் கோரப்பட்டு அனுப்பப்பட்டாலும், நூல்களுக்கு சாயம் இடும் பணிகள் முடிந்து, ஒட்டுமொத்த மக்களுக்கும் வேட்டி, சேலைகளை தயாரித்து வழங்குவது சாத்தியமில்லாத ஒன்று என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசான விலையில்லா வேட்டி, சேலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad