அப்பாடா... அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு..! தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

அப்பாடா... அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு..! தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

அப்பாடா... அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு..! தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய விவாதம் நடைபெற்றபோது ''டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம், 500 ரூபாய் கூடுதலாக, 2021 ஏப்ரல் முதல் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மேலும், மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் குற்றங்களுக்கு தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காக, 5 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.

மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துடன், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் இணைந்து மேற்கொள்ள, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

டாஸ்மாக் நிறுவனத்தில், 6,761 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம், 25 ஆயிரத்து 9 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், அமைச்சர் அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.500 அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் அறிவிப்பால் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ. 12750 இல் இருந்து ரூ. 13 250 ஆகவும், விற்பனையாளர்கள் ஊதியம் ரூ. 11100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ. 10000 ஆகவும் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad