சாதிய மோதல்களை உருவாக்க சதி: டிஜிபியை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

சாதிய மோதல்களை உருவாக்க சதி: டிஜிபியை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி

சாதிய மோதல்களை உருவாக்க சதி: டிஜிபியை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார் கார்த்திகேய சிவசேனாபதி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகம் கவனம் பெற்றார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி.
கட்சியில் இணைந்ததும் சுற்றுச்சூழல் அணி என புதிதாக ஒரு அணியை உருவாக்கி அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சட்டமன்றத் தேர்தலின் போது எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வெற்றி பெறவில்லை என்றாலும் வேலுமணிக்கு கடுமையான போட்டியளித்தார்.

கடந்த இரு நாள்களாக கார்த்திகேய சிவசேனாபதியின் மகள் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. இதனால் சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலந்திரபாபுவை சந்தித்து அவர் புகார் அளித்தார்.



அதில், தமது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், தங்கள் பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் சிலர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் சாதி, மத ரீதியான தகவலை பரப்பி மோதலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக கார்த்திகேய சிவசேனாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad