எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளில் பழனிவேல் தியாகராஜனை கலாய்த்த ஜெயகுமார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளில் பழனிவேல் தியாகராஜனை கலாய்த்த ஜெயகுமார்!

எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளில் பழனிவேல் தியாகராஜனை கலாய்த்த ஜெயகுமார்!

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்" என்ற எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் பாடல் வரிகளைக் கூறி, தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை வழங்கி உள்ளார்.

அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது மிகப்பெரிய விவாத பொருளானது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடையே வார்த்தை போர் உருவானது.

இந்நிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர் - சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்து கொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல.

முதன்முறை அமைச்சர் ஆனதால் தலைகால் புரியாமல் சித்தம் கலங்கி பேசுவது போல் பேசி வருவதால், சில வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது. தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு, ஜி.எஸ்.டி., யின் வரலாறு தெரியாமல் இருப்பது தங்களுக்கு அழகல்ல.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்திருந்த போது, தமிழகத்திற்கு மத்திய அரசு வைத்திருந்த வாட் வரிக்கான நிலுவை தொகை மட்டும் ரூ.4,080 ஆயிரம் கோடி. நீங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைப்பேன் என்று கூறி, அந்த நிலுவைத் தொகையை பெற்றுத் தந்திருக்க முடியும்.

ஆனால் பதவி சுகத்திற்கு ஆசைப்பட்டு தமிழக மக்களின் நலன்களை அடகு வைத்து வாளாவிருந்தீர்கள். அதன் நீட்சியாகத் தான் இப்போதும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. பதவி வரும்போது பணிவும் வர வேண்டும், துணிவும் வரவேண்டும் என்று பாடியிருப்பார் எம்.ஜி.ஆர்.

இந்த பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? பழனிவேல் தியாகராஜனுக்கு மிகவும் பொருந்தும். பதவியில் இருக்கும் போது பணிவு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். உங்களுக்கும் நாகரீகம் என்ற சொல்லுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இருந்த கொஞ்சநஞ்சத்தையும் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு வந்து வீட்டீர்கள் என, நினைக்கிறேன்.

தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் சுயமோகி. நானும் படித்தவன் தான், இரண்டு பட்டங்கள் பெற்றவன் தான். இளம் அறிவியலிலும் முதன்மையான மாணவன், சட்டப் படிப்பிலும் அப்படியே. அதற்காக ஒருநாளும் கர்வம் கொண்டு அலைந்தவனல்ல. படிப்பு வேறு, களநில பொருளாதாரம் வேறு என்று இப்போது தான் உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு - பணக்காரர்களுக்கு வேலை செய்திருப்பீர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad