ஆப்கனில் பதற்றம்..! பாகிஸ்தானே வெளியேறு முழக்கம்..! - தலிபான்கள் துப்பாக்கிச்சூடு!
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பேரணியை தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள்
வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் புதிய அரசு அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து தலிபான் அமைப்பு செயல்படுகிறது. தலிபான் அமைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்நிலையில், ஹக்கானி பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறது. தற்போது ஆப்கனில் புதிய அரசு அமைக்க, தலிபான்கள் நடவடிக்கை
எடுத்து வரும் நிலையில், ஹக்கானி அமைப்புக்கு முக்கியத்துவம் தருவதற்கு தலிபான்கள் தயங்குகின்றனர்.
இதனால், ஹக்கானி மற்றும் தலிபான்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் ஹமீத் பயஸ் காபூல் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான்
தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காபூலில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment