வேலையில்லா இளைஞர்களுக்கு மானியம்: தொழில்துறை அமைச்சர் முக்கிய தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

வேலையில்லா இளைஞர்களுக்கு மானியம்: தொழில்துறை அமைச்சர் முக்கிய தகவல்

வேலையில்லா இளைஞர்களுக்கு மானியம்: தொழில்துறை அமைச்சர் முக்கிய தகவல்

சட்டசபையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆற்றிய உரையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் கடந்த ஆகஸ்ட் வரை 987 பயனாளிகளுக்கு, ரூ.9 கோடியே 61 இலட்சத்து 70 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஒன்றிய அரசின் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 599 பயனாளிகளுக்கு, ரூ.17 கோடியே 14 இலட்சத்து 94 ஆயிரம் மானியமாக
வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்கூட்டுறவுசங்கங்கள், பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் சந்தை வாய்ப்பிற்கான சேவைகளை வழங்குவது ஆகிய நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இண்ட்கோசர்வ் -சேகோசர்வ், தாய்கோ வங்கி – கயிறு தொழிற் கூட்டுறவு சங்கங்கள்உள்ளிட்ட 299 சங்கங்கள்
செயல்பட்டு வருகின்றன.



இத்தொழிற்கூட்டுறவு சங்கங்கள், இந்த நிதியாண்டில், ரூ.360 கோடியே 57 இலட்சத்து 77 ஆயிரம் அளவிற்கு, வியாபாரம் செய்து, ரூ.12 கோடியே 2 இலட்சத்து 32 ஆயிரம், நிகர இலாபமாக ஈட்டியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு காலக் கடன், காசுக்கடன்
போன்ற கடன் வசதிகளை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 47 கிளைகள் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கி பொது மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன், வீடு அடமானக் கடன், வீடுகட்ட கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கி வருகிறது.

இந்நிலையில், தாய்கோ வங்கியின் செயல்பாடுகளை தற்கால சூழலுக்கு ஏற்ப MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மாற்றியமைக்க இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இவ்வங்கி இந்த நிதியாண்டில், ஆகஸ்ட் வரை ரூ.2 கோடியே 88 இலட்சத்து 48 ஆயிரம் நிகர இலாபமாக ஈட்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசின் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இணையமாக இண்ட்கோசர்வ் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஃபேர்டிரேட் (Fair Trade) என்ற உலகதரச் சான்றிதழை, இண்ட்கோசர்வ் நிறுவனமும் மஞ்சூர் - பிராண்டியர் - சாலிஸ்பரி மற்றும் பிதர்காடு தொழிற்சாலைகள், டிரஸ்டீ
(Trustea) என்ற தரச்சான்றிதழையும் பெற்றுள்ளன. இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் வரை ரூ.121 கோடியே 54 இலட்சம் வியாபாரம் செய்து ரூ.7 கோடியே 6 இலட்சம் இலாபம் ஈட்டியுள்ளது. மாநில அரசின் கயிறு குழுமங்கள் நிறுவுதல் திட்டத்தின் கீழ், ரூ.21 கோடியே 55 இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்புடன், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 2 கயிறு குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் கயிறு குழுமம் விரைவில் தொடங்கப்படும்.



திருச்சி–நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழில் பெருந்தடமாக அரசு அறிவிக்கை செய்ய முடிவு செய்துள்ளதைத தொடர்ந்து கயிறு தொழில்களை மேம்படுத்திட கயிறு
குழுமங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மன்னார்குடி, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியைச் சார்ந்த தென்னை விவசாயிகள் பயனடைவர்.

சேகோசர்வ், சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 72,070 மரவள்ளி கிழங்கு விவசாயிகள் பயனடையும் வகையில் 411 சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு உற்பத்தியாளர்களுக்கு சந்தை
வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள மின்னணு ஏலமுறையில் உள்ள இடர்பாடுகளை களைந்து முறைகேடுகளை தவிர்க்கவும் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களுக்கு அதிகபட்ச விலையைப்
பெற ஏதுவாகவும் வெளிப்படையான முறையில் ஏலம் நடைபெறுவதை உறுதி செய்யவும் மின்னணு இணையதளம் மறுசீரமைக்கப்படும் இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் மாத இறுதி வரை, ரூ.2 கோடி மொத்த இலாபம் ஈட்டியுள்ளது.



முத்தமிழ் அறிஞர் கலைஞரால் 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சிட்கோ நிறுவனம் தற்போது வரை 122 தொழிற்பேட்டைகளுடன் இயங்கி வருகிறது. இத்தொழிற்பேட்டைகளில் 8,692 தொழிற்சாலைகள்
செயல்படுவதன் மூலம் 1 இலட்சத்து 52 ஆயிரம் 895 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். மேலும் புதிய 8 தொழிற்பேட்டைகள் ரூ.225 கோடி மதிப்பில் 343 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீரான தொழில் வளர்ச்சி பெற ஏதுவாக புதிய தொழிற்பேட்டைகளுக்கான
நிலவங்கி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad