'இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு': கமல்ஹாசன் கடும் ஆதங்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

'இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு': கமல்ஹாசன் கடும் ஆதங்கம்

'இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு': கமல்ஹாசன் கடும் ஆதங்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு கனிமொழி (17), கயல்விழி (19) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 12ஆம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த கனிமொழி மருத்துவம் படிக்கும் கனவில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று
நீட் தேர்வு எழுதினார்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் அவர் சரியாக எழுதவில்லை எனக்கூறி தன்னுடைய தந்தையிடம் வேதனை பட்டுள்ளார். அதன்பிறகு கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அண்மையில் சேலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.

இவரது இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தனுஷ், கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார். இரு சம்பவங்களும் தமிழகத்தில் பேரதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில், நீட் எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே கவுன்சிலிங்க் கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாணவி கனிமொழி இறப்புக்கு வருந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், '' ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!'' என இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad