கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு!

கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதனால், கலைவாணர் அரங்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் நுழைந்தாக தெரிகிறது. அவர் முதல் கேட் பாதுகாப்பை கடந்து இரண்டாவது கேட் பத்திரிக்கையாளர் அறை அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அவரிடம் ஐடி கார்டு காட்டும்படி கூறியுள்ளனர்.

அப்போது திடீரென அவர் தனது வயிற்றுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு போலீசார் துரிதமாக செயல்பட்டு, அவரிடமிருந்து கேனை பறித்து அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தீக்குளித்து

தற்கொலை செய்து கொள்ள முயன்ற அவரை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஆறுமுகம் என்பதும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள கேபிள் டி.வி.யில் அவர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.


சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad