நகை கடன் தள்ளுபடி: இதை தயாராக வைத்திருக்க வேண்டும், அரசாணை வெளியாகுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

நகை கடன் தள்ளுபடி: இதை தயாராக வைத்திருக்க வேண்டும், அரசாணை வெளியாகுமா?

நகை கடன் தள்ளுபடி: இதை தயாராக வைத்திருக்க வேண்டும், அரசாணை வெளியாகுமா?


நகை கடன் தள்ளுபடி குறித்து அரசாணை வெளியிடுவதில் திமுக அரசு தாமதம் காட்டுவது ஏன்?

தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்போது வரை இருந்து வருகிறது. நிதிநிலை நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு தான் கொடுத்த தேர்தல் அறிக்கையில் இருந்து பின்வாங்குவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றன.இந்த சூழலில் நகை கடன் தள்ளுபடி குறித்து திமுக அமைதி காப்பது எதனால் என்பதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் மற்றும் ஏழைகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அறிவித்தார்.

அதன் அடிப்படையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கியது. ஆனால், 3 மாதங்களுக்கு மேல்ஆகியும் விவசாயிகள் அடமானமாக வைத்த நகைகளை தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் திரும்ப அளிக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையில் தேர்தல் நடந்து ஆட்சியையும் மாறிவிட்டது.இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்' என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பயிர்க்கடன் ரத்து அறிவிப்பால் சில மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தது.இதை சட்டசபையில் சுட்டிக்காட்டி பேசிய இப்போதைய நிதியமைச்சர் பழனிவேல், பயிர் கடன் ரத்து முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாகும் என்றும் இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால், அது குறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர் என்றும் நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
எங்க போறதுனே தெரியல, இப்படி வந்து நிக்கிறேன்... பெண்ணின் கண்ணீர்..!

இதற்கு மத்தியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூட்டுறவு வங்கி நகை கடனில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 5 வங்கிகளில் போலியான முறையில் நகை கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நகை கடனை தள்ளுபடி செய்யும் அரசாணையை பிறப்பிக்கும் முன்பு அதற்கான கடும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது . இதை உறுதி செய்யும் விதமாக கூட்டுறவுத்துறை அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad