அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அமைச்சர் அதிரடி உத்தரவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அமைச்சர் அதிரடி உத்தரவு..!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அமைச்சர் அதிரடி உத்தரவு..!

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதியதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டத்திலே வழங்கப்படும். வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணியிடம் மாற்றம் செய்த ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணி அமர்த்தும் வகையில் கலந்தாய்வின் போது அவர்களுக்கு என்று முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். இதன் மூலம் 16 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை துறையில் பல்வேறு அலுவலர்களுக்கு 3 ஆண்டுகள் பதவி உயர்வு வழங்காததை அமைச்சர் கவனத்தில் கொண்டு வந்த நிலையில், தமிழக அரசு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

நெடுஞ்சாலை துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு அளிக்கப்படமால் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனை அமைச்சர் எ.வ.வேலு கவனத்திற்கு அலுவலர்கள் கொண்டு சென்றனர். அதனை பரிசீலினை செய்து நேற்று (செப் 13) பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு 156 அலுவலர்களுக்கு கீழ்கண்டவாறு பதவி உயர்வு அளித்து நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளளார்.

தட்டச்சர் - இளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பதவி உயர்வு (91 அலுவலர்கள்)

வரைதொழில் அலுவலர் நிலையில் இருந்து முதுநிலை வரை தொழில் அலுவலர் (29 அலுவலர்கள்)

உதவியாளர் நிலையில் இருந்து கண்காணிப்பாளர் (26 அலுவலர்கள்)

உதவியாளர்/கண்காணிப்பாளர் நிலையில் இருந்து கோட்ட கணக்கர் (10 அலுவலர்கள்)


ஆகிய 156 அலுவலர்களுக்கு பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad