தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்: 16ம் தேதி தொடக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்: 16ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்: 16ம் தேதி தொடக்கம்

தமிழக திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக அன்னதானத் திட்டம் 2002-ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. அதன்படி, மதியவேள ை உணவு 754 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழநி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்ககாயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டபேரவையில் இந்து அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி, செப்டம்பர் 17ம் நாள் முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அத்தனையோ தொடர்ந்து திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் வரும் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் தகவல் கூறியுள்ளார்.

முன்னதாக சட்டசபையில் இதுகுறித்து பேசிய அமைச்சர், திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களில் பெறப்பட்டுள்ளது. இதுவரை 45 திருக்கோயில்கள் இந்த சான்றிதழை பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களுக்கு சான்று பெற நடவடிக்கையில் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad