பம்பர் டு பம்பர் காப்பீடு தற்காலிக நிறுத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

பம்பர் டு பம்பர் காப்பீடு தற்காலிக நிறுத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பம்பர் டு பம்பர் காப்பீடு தற்காலிக நிறுத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாலை விபத்து மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்த ு போக்குவரத்துத் துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என பொது காப்பீட்டு மன்றம் சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஆனால், ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, பொது காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad