பானிபூரி விற்ற வடமாநில இளைஞரை கட்டி வைத்த நாம் தமிழர் கட்சியினர்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

பானிபூரி விற்ற வடமாநில இளைஞரை கட்டி வைத்த நாம் தமிழர் கட்சியினர்..!

பானிபூரி விற்ற வடமாநில இளைஞரை கட்டி வைத்த நாம் தமிழர் கட்சியினர்..!

சென்னை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட மேனாம்பேட்டில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில்வீரப்பன் நினைவுக்கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றினர். அதனை தொடர்ந்து, பட்டறைவாக்கத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனார் மற்றும் கொரட்டூரில் உள்ள தமிழ்த்தேசியப் போராளி கடல் தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் புலிக்கொடியேற்றினர்.
அதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், பட்டறைவாக்கம் பகுதியில் இருந்த கட்சியினர் அவ்வழியே வந்துகொண்டிருந்த வட மாநில பானிபூரி காரரிடம் பானிபூரி வாங்கியுள்ளனர்.

அப்போது பானிபூரிக்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வாங்கிய பானிபூரியை கீழே கொட்டியவர்கள், அந்த வட மாநில இளைஞரை அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் விற்கப்படும் பானிபூரிகள் தரம் இல்லாமல் அதனை அசுத்தமாக தயார் செய்வதாக தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகுவதால் பானிபூரி விரும்பிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில் வட மாநிலத்தில் உள்ள ஒரு பானிபூரி கடையில் பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் கடைக்காரர் சிறுநீர் கலக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad