கொரோனா எதிரொலி: பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

கொரோனா எதிரொலி: பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை..!

கொரோனா எதிரொலி: பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தளவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் திருத்துறைப்பூண்டியில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த பள்ளிக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாவட்ட பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை குறைந்த வேகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு லட்ச கணக்கான மாணவி, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வந்தாலும் ஓரிரு மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில் அது பூதாகாரமாகிவிடும் என்பதால் மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுமோ என்ற சூழல்தான் இப்போது நிலவுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad