தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு இழைத்த அநீதி: ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியீடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு இழைத்த அநீதி: ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியீடு!

தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு இழைத்த அநீதி: ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியீடு!

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அமைத்தது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் 33 நாட்களில் ஆய்வை முடித்து கடந்த ஜூலை மாதத்தில் தங்களது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.

“அனைத்து அம்சங்களையும் அறிக்கையில் கொடுத்துள்ளோம். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதகங்களே அதிகம் எனப் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர்” என ஏ.கே.ராஜன் அப்போது தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்டிற்கு முன்பும் பின்பும் சேர்ந்த விகிதம், தமிழ் வழி பயின்றவர்கள் சேர்ந்த விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, தமிழ்நாடு மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNSBSE) கீழ் கடந்த 10 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 2011 முதல் 2017 வரை மேல்நிலைக் கல்வியில் (HSC) அதிகரித்து வந்ததாகவும், 2017ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு பின்னர், 2020ஆம் ஆண்டு வரை அதன் எண்ணிக்கை 12.7 சதவீதமாக குறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-2020-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1,13,322 பேர் என்ற அளவில் மாணவ/மாணவியர் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad