மாஜி அமைச்சர் சரோஜாவுக்கு சிக்கல்: விசாரணை தீவிரம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கொடுத்த புகார் மீதான விசாரணை சூடுபிடித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் கிடைத்த தகவல்களைக்
கொண்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக எந்த முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ரெய்டு நடத்தப்படும் என்று யூகங்களும் கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இதில பல மாஜி அமைச்சர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் சரோஜா பெயர் முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. ராசிபுரத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் சரோஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment