மாஜி அமைச்சர் சரோஜாவுக்கு சிக்கல்: விசாரணை தீவிரம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கொடுத்த புகார் மீதான விசாரணை சூடுபிடித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டிரெண்டிங்
பள்ளிகள் திறப்பு
பிரசாந்த் கிஷோர்
திருப்பதி ஷாக்
ஆன்லைன் வகுப்புகள்
WATCH
டிஷ்யூ பேப்பர் வைக்க அழகான ஸ்டாண்ட்!
Tamil NewsLatest NewsState NewsThe Inquiry Into The Complaint Lodged Against Former Minister Saroja Is Heating Up
மாஜி அமைச்சர் சரோஜாவுக்கு சிக்கல்: விசாரணை தீவிரம்!
Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 7 Sep 2021, 8:26 am
2
3
5
Subscribe
அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கொடுத்த புகார் மீதான விசாரணை சூடுபிடித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படும் விதம் சரிதானா?
இந்தியாவிலும்
தாலிபான்கள்?
அடுத்ததாக எந்த முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ரெய்டு நடத்தப்படும் என்று யூகங்களும் கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இதில பல மாஜி அமைச்சர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் சரோஜா பெயர் முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. ராசிபுரத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் சரோஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.“அதிமுக ஆட்சியில் சத்துணவுத்துறையில் வேலை வாங்கித்தருவதாக சரோஜா கூறியதை நம்பி, 15 பேரிடம் 76.5 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன். ஆனால், வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லை. அத்துடன் என் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கிறார்” என்று ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படும்!
இந்த புகாரைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி சரோஜாவிடம் அவரது ராசிபுரம் வீட்டில்வைத்து காவல்துறையினர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 15 பேரிடமும் காவல்துறையினர் தகவல்களைப் பெற்ற்றுள்ளனர்.
சரோஜாவுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரிலிருந்து அவர் தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லையாம். விரைவில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment