கனிமொழியிடம் நோ சொன்ன எடப்பாடி பழனிசாமி!
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமானத்தின்போது உறுதி மொழி எடுத்துக்கொண்ட ஆர்.என். ரவி, “'மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு சேவையாற்றுவேன்” என்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு 8ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியின் போது ஸ்டாலினுக்கு
பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டபோதும், தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அதிமுகவினருக்கு அளித்த முக்கியத்துவம் அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, எல்.முருகனுக்கு பின் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. பலரும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான உண்மையான விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த விழா தமிழக அரசு தரப்பில் செய்யப்பட்டது கிடையாது. ஆளுநர் மாளிகைதான் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆளுநர் மாளிகையை சேர்ந்தவர்கள்தான் அனைவருக்குமான இடங்களை ஒதுக்கீடு செய்திருந்தனர்.
இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் ஆகியோர் பின்வரிசையில் அமர்ந்திருந்ததை கண்ட ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவர்,
அவர்களிடம் சென்று முன்வரிசையில் இருக்கும் காலியிடங்களை சுட்டிக்காட்டி, ஐயா முன்னால் சென்று அமருங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஆனால் இரண்டு தலைவர்களும் இருக்கட்டும் என்று கூறி பின் வரிசையில் அமர்ந்து உள்ளனர்.
No comments:
Post a Comment