கணவன் கண்ணெதிரே போதையில் எல்லை மீறிய நண்பர்கள், பரிதவித்த மகள்கள்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

கணவன் கண்ணெதிரே போதையில் எல்லை மீறிய நண்பர்கள், பரிதவித்த மகள்கள்..!

கணவன் கண்ணெதிரே போதையில் எல்லை மீறிய நண்பர்கள், பரிதவித்த மகள்கள்..!

குமரி மாவட்டம் அருகே உள்ள வாள்வச்சகோஷ்டம் பகுதியில் மனைவியும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளின் முன்னிலையில் மது அருந்திய கணவர்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி உதை.
மதுப்பழக்கத்தால் அண்மையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த மின்சார வாரியப் பணியாளர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகாரமானது. அவ்வப்போது கணவனின் மதுப்பழக்கத்தால் இல்லதரிசிகளின் வாழ்க்கை நடுரோட்டுக்கு வந்து நிற்கும் செய்திகளும் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில்,குமரி அருகே மனைவியை கண்முன்னே வாலிபர்கள் தாக்குவதை மதுபோதையில் கணவன் நின்று வேடிக்கை பார்க்கும் சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவன் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவன் அனீஸ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனீஸ் தனது நண்பர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து வைத்துள்ளார்.

மது விருந்து நடக்கும் நேரத்தில் கிரிஜா மற்றும் அவரது மூன்று பெண்பிள்ளைகளும் அந்தக் காட்சிகளை படம் பிடித்துள்ளனர். இதில் கடுப்பாகி போன ஒரு நபர் கிரிஜாவை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த கணவன் அனீசும் தனது மனைவி என்று பாராமல் மதுபோதையில் கிரிஜாவை சரமாரியாக தாக்கினார்.


இந்த காட்சிகளை அங்கிருந்த கிரிஜாவின் மகள்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad