விநாயகருக்கு 'விநாகயர்'... கிழிஞ்சது கிருஷ்ணகிரி... காயத்ரி ரகுராமின் தமிழ் வைரல்..!
விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கூடி கொண்டாட வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலையை எங்களது வீட்டு வாசலிலே மூன்று நாட்களுக்கு வைத்து வழிபட போகிறோம் என்றும் அது எங்களது தனிப்பட்ட உரிமை என்பதால் அரசு அதில் தலையிட முடியாது என்றும் பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை கூறினார்.
மேலும்,
முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு லட்சம் வாழ்த்துகளை எழுதி தபால் மூலம் அனுப்பி வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என்று நீதிமன்றமும், ஒன்றிய அரசும் அறிவுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் தொடர்ச்சியாக திமுக அரசை விமர்சனம் வைத்து வந்தனர்.
பின்னர் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசான பாஜகவும் இதே தடையை பிறப்பித்ததை தாமதமாக புரிந்துகொண்டவர்கள் இப்போது அமைதியாகியுள்ளனர்.
மேலும், அண்ணாமலை சொன்னவாறே முன்னதாக விநாயகர் சதுர்த்தியை தனிநபர் வீடுகளில் கொண்டாட தடையில்லை என்று அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ட்விட்டரில்
புரட்சி செய்வதாக நினைத்து தப்பு தப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை எழுதி முதல்வர் ஸ்டாலினை டேக் செய்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம் எழுதிய அந்த கடிதாசியில், '' நம் ''விநாகயர்'' ''பெருமனால்'' மட்டுமே சங்கதமிழையும், நம் தமிழ் மக்களையும் காக்க முடியும். முதல்வரே நீங்கள் மக்களின் உணர்வை காயப்படுத்துகின்றீர்கள். ''வாழ்த்துக்கள்'' என எழுத்து பிழையுடன் கூறியுள்ளார்.
அதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், காயத்ரி ரகுராமை கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர். விவகாரத்தை தெரிந்துகொண்ட காயத்ரி அந்த ட்வீட்டை டெலிட் செய்யாமல், சாமர்த்தியமாக விளக்கம் ஒன்றையும் கூறியுள்ளார். அதாவது, '' இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு
வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தியின் எழுத்துப்பிழையை தெரிந்துகொள்வாரா? என பதிவிட்டு மழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment